புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்டவர் . பல நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் கொடைக்கானலில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீக்கு எதிரான விழிப்புணர்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி .
அதில் அவர் பேசியதாவது "கோடை வெயிலுக்கு இதமளிக்கிற இயற்கை தந்த கொடை கொடைக்கானல். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இது ஒரு கனவு பிரதேசம். வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பல உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன . இது நெருப்புகாலம் என்பதால் எளிதில் பற்றிக்கொள்ளும் நிலைமையில் காடு இருக்கிறது. சிறு தீப்பொறி பட்டால் போதும் காடோடு சேர்ந்து மரங்கள், பறவைகள் என அனைத்தும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிராக இந்த போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம் என்று கார்த்தி வீடியோவில் கூறியுள்ளார் .